Monday, October 19, 2009

முகவுரை

முகவுரை

இன்றைய காலகட்டத்தில் சமாதனாம் என்பது சீர்குலைந்து உலகெங்கும் போர் வெறியே காணப்படுகிறது. அரக்க குணம் மலிந்துவிட்டது. எப்போது எந்த அபாயம் நிகழும் என்று எண்ணிப் பார்க்கக்கூட முடியாத நிலையில் இருக்கிேறாம். இயற்கையால் ஏற்படக்கூடிய அபாயங்களாகிய வறட்சி, வெள்ளப் பெருக்கு, நில நடுக்கம் போன்றவற்றைத் தடுக்க முடியாது. ஆனால், செயற்கை முறையிலான அணுகுண்டுப் போர் முறையை ஏற்பதால் நம்மை நாமே அழித்துக் கொள்கிேறாம் என்பதை உணருவதில்லை. இதற்குக் காரணம் ஒருவர் மேல் மற்றெhருவர் கொள்ளும் பொறாமையே காரணம். இன்றைய நவீன வாழ்க்கை வரும் அபாயத்தைத் தடுக்கக் கூடியதாக இல்லை. அதனால் எந்த அபாயம் வருமோ என்று அஞ்சி அஞ்சி அமைதியில்லாமல் வாழ்கின்ேறாம்.

இறைவன் மேல் கொள்ளும் பக்தி மார்க்கம்தான் அந்தப் பயத்தை நீக்க முடியும். பக்தி மார்க்கமே நல்ல வழி என்று கண்டு அணுகுண்டு தாத்தா என்று சொல்லப்படும் சவுண்டப்ப செட்டியார் அவர்கள் உலகில் உள்ள எல்லாக் கடவுள்களும் ஒரே கடவுள்தான் என்று சொல்லி அக்கடவுள்களின் நாம மந்திரத்தைச் சொல்லச் சொல்லி அரக்கன் மாய்வான், ‘அரக்கன் மாய்வன், அணுகுண்டு அரக்கன் மாய்வானே’ என்ற மந்திர வார்த்தையை உபயோகித்து எல்லோரையும் பாட வைக்கிறார். அதனால் அணுகுண்டு அரக்கனின் சக்தியை வலுவிழக்கும் ஆற்றலைப் பெறுகின்றார்.

அவர் பள்ளிதோறும் சென்று மாணவர்களிடையே பாரதியார் பாடல்களைப் பாடிக்காட்டி தேச பக்தியையும், இறையாண்மையயும், நமது தாய்மொழியாம் தமிழ் மொழியின் பெருமையையும் எடுத்துச் சொல்பவர். அவர் நன்றாகப் பக்திப் பாடல்களைப் பாடக் கூடியவர். அவரது இசையைக் கேட்டவர்கள் தம்மை மறந்து ஈடுபடுவார்கள்.

இன்றைய சீர்குலைவுக்குக் காரணம் சில திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களும், தொலைக்காட்சி சேனல்களும் தான் என்பதை நன்றாக வலியுறுத்தி அவர்களை, நல்ல கருத்துகள் உடைய படங்களைத் தந்தருளுமாறு வேண்டுகிறார். இது சரியான வேண்டுகோள். அந்த வேண்டுகோள் நிறைவேறினாலே ஏகப்பட்ட வெற்றி அடைந்துவிடலாம். அதனால் அந்தத் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் இந்த வேண்டுகோளை ஏற்று நமக்கெல்லாம் ஆபாசங்கள் இல்லாத நல்ல படங்களை உருவாக்கித் தருவார்கள் என்று நம்புகிேறாம்.

அவர் எழுதிய ‘உலக அமைதி’ என்று புத்தகத்தை எல்லோரும் நன்றாகப் படித்துப் பார்த்து தங்களுடைய பிள்ளைகளுக்கும் தேச பக்தியையும் இறையாண்மையையும் மொழிப் பற்றினையும் கற்றுக் கொடுக்க வேண்டுகிறேன்.

அவர் 83 வயது முதுமையான காலத்திலும் தனது சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் இன்னும் பல்லாண்டு காலம் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து என்றென்றும் நீடூழி வாழ்க என வாழ்தி முடிக்கின்றேன்.

திருப்பூர் வாரியார்,
சைவ சித்தாந்த ரத்தினம்
nஜ.ஜp. ஜெயசீலன். பி.ஏ.
கூட்டுறவு துணைப் பதிவாளர் (ஓய்வு)
திருப்பூர்.

உலகில் அனைவரும் அமைதியாக வாழ்வோம்.
We shall live peacefully in this world.

No comments:

Post a Comment