Monday, October 19, 2009

வாழ்த்துரை


KNIT CLOTH MANUFACTURERS ASSOCIATION
17, T.S.PURAM,VALIPALAYAM,
TIRUPUR – 641 601.INDIA.
TEL : 91-421-223 43 53 / 223 47 53
FAX : 91 – 421 – 223 08 53
E-mail : knitma@eth.net
Website : www.knitcma.com


திருப்பூர் M/s. சென்ட்ரல் நிட்டிங் கம்பெனி உரிமையாளரும் பழனி ஆண்டவர் பிளிச்சிங் கம்பெனி நடத்தியவரும் ‘அணுகுண்டு தாத்தா என்று அழைக்கப்படும் திரு. எம். கே. சவுண்டப்பன் அவர்கள் 24 ஆண்டு காலமாக கோயில்களில் பக்திப் பாடல்களைப் பாடியும், ஆன்மீகப் பெரியோர்கள் பலரை வரவழைத்து அணுகுண்டு ஒழிப்பு முறையைப் பற்றியும் சொற்பொழிவாற்றுவார். இவர் நம் நாட்டு அமைதிக்காக அரும்பாடுபட்டவர். பள்ளி மாணவர்களுக்கு ஒற்றுமை, விழிப்புணர்வு, தேசபக்தி, காந்தியடிகளின் அகிம்சை கொள்கைகளை உரையாற்றுவார். இவர் தம் தள்ளாத வயதிலும் தளராமல் மக்கள் சேவை செய்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். ‘உலக அமைதி’ எனும் இப்புத்தகத்தை வெளியிடுவதன் மூலம் இன்னும் பல சாதனைகளைச் செய்து மக்களுக்குப் பயனுள்ள வகையில் பணியாற்றிட என்னுடைய மனமார்ந்த வணக்கத்தையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புள்ள
அகில் சு.ரத்னம்
தலைவர் - நிட்மா




DYER’S ASSOCIATION OF TIRUPPUR (DAT)
No. 7, (Old No. 4) Pethichettypuram, 2nd Street,
Tirupur – 641 601 Ph : 2202578 / 2242121

திருப்பூர் M/s சென்ட்ரல் நிட்டிங் கம்பெனி உரிமையாளரும் பழனி ஆண்டவர் பிளிச்சிங் கம்பெனி நடத்தியவரும் ‘அணுகுண்டு தாத்தா’ என்று அழைக்கப்படும் திரு. எம். கே. சவுண்டப்பன் அவர்கள் பல ஆண்டு காலமாக மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைக் கொள்கைகள், தேசபக்தி, விழிப்புணர்வு, ஒற்றுமை போன்ற சமூகப்பணி பலவற்றையும் மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் நிகழ்த்தியுள்ளார்கள். மேலும் அவர்தம் வயதையும் பொருட்படுத்தாமல் ஆன்மீகச் சொற்பொழிவுகள், பஜனைப்பாடல்கள் மூலம் எல்லோருக்கும் மனதில் ஆழமாகப் பதியுமாறு உணர்த்திவருகிறார்.

தந்தை ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் பகுத்தறிவுப்பாதையிலும் சேவை புரிந்தவர். இந்த உலகை ஒரே நொடியில் அழிக்கக்கூடிய பயங்கர அணுகுண்டு அரக்கனை மாய்க்க உலகமக்கள் அனைவரும் கட்டாயமாக ஒன்றுகூடி ஆகவேண்டும் என்று சேவை செய்து கொண்டு இவர் ‘உலக அமைதி’ என்ற புத்தகத்தை வெளியிடுவதற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
தங்களன்புள்ள
நா. கந்தசாமி
(சேர்மன் நா. கந்தசாமி பி.எ.பி.எல்.,
தலைவர்





THE SOUTH INDIA HOSIERY MANUFACTURER’S ASSOCIATION
47 (34-A), SIDCO – Hosiery Industrial Estate
Harvey Road, Thirupur – 641 602.
Tamilnadu, S. India.
Phone : 2203122, 2246420,2230874, 2207034
Fax : 0421 – 2246427


வாழ்த்துரை

திருப்பூர் ஆ,ள. சென்டரல் நிட்டிங் கம்பெனி உரிமையாளரும், ‘அணுகுண்டு தாத்தா’ என்றழைக்கப்படும் திரு. எம். கே. சவுண்டப்பன் அவர்கள் 24 ஆண்டுகாலமாக, கோயில்களில் பக்தி பஜனைகளையும், ஆன்மீகப் பெரியோர்கள் பலரை வருகை தரச்செய்து அணுகுண்டை ஒழிக்கும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் பல நிகழ்த்தச் செய்தும் பள்ளி மாணவர்களுக்கு தெய்வ பக்தி, தேசபக்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இந்தத் தள்ளாத வயதிலும் தளராமல் நிகழ்த்திக் கொண்டும் வருவதைக்கண்டு மிக்க மகிழ்சியடைந்தேன். இவரது புதிய பாணியில் நற்பணி சிறக்கவும், ‘உலக அமைதி’ என்ற புத்தகம் வெளியிடுவதற்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள
(மோகன் P. கந்தசாமி Ex.M.L.A)
தலைவர் (FOHMA & SIHMA)




எஸ்.ஜp.இசட்கான்.
24, எஸ்.வி. குடியிருப்பு,
கிழக்கு 8வது வீதி,
திருப்பூர் - 641 602.
பாராட்டுரை

‘இயற்கையில்’ காணும் எந்த ஒன்றும் வீணாகப் போவதில்லை, போனதுமில்லை. ஏதேனும் ஒரு வகையில், எங்கேனும் ஒரு சமயத்தில் பயனாகாமல் இருப்பதில்லை. இதனை உலகு புரிந்து கொண்டுள்ளது, உணர்ந்துமுள்ளது.

எமக்கு மூத்த நண்பர் - நீண்ட நாளைய நண்பர் மனம் விட்டு எவ்விசமாயினும் விவாதிக்கும் இயல்புடையவர் வதம்பை சௌண்டப்பா. இடையில் சென்ட்ரல் சவுண்டப்பா, கடையில் ‘அணுகுண்டு தாத்தா’ என்று அழைத்துக் கொள்வதிலும், அழைப்பதிலும் பேரார்வம் கொண்டவர் எம்.கே. சௌண்டப்பச் செட்டியார் என்பது பலரும் அறிந்த ஒன்றேயாகும்.

ஏதோ, நு}ல் பற்றிய விவரம் என அறிய முனைந்தால், நு}லாசிரியரின் சிறப்பம்சம் பற்றியே உரை தொடருகிறேதே என்று வாசிப்போர் எண்ணத்தில் தோன்றக் கூடும். அது இயல்பானதே * இருப்பினும், நு}லைவிட நு}லாசிரியரின் மேன்மையே கருத்தில் - கவனத்தில் கொள்வதன் மூலம் மட்டுமே நு}ல் உரையைத் தொடர இயலும் என்பதாலேயே அன்றி, வேறு எக்காரணமுமில்லை.

எமது (எம்.கே.எஸ்) நண்பரின் செயல்பாடுகள், எண்ணங்கள் பெரும்பாலும் வெளிப்படையானவை. ஏதோ ஒன்றிரண்டோ, ஒரு சிலதோ அவ்வாறின்றி இருக்கலாம். இதனால், அவர் மன அழுத்தம் பெரும்பாலும் தானாகக் குறைத்துக் கொள்ளும் இயல்பினர் என்பதால் அவரது 60-ம் பிறந்த தின விழாவின்போதே கூடுதலான ஆண்டுகள் தொடர்ந்து கிடைக்க இருப்பவை 60 என கூறிட முனைந்தேன், கூறினேன். அதில் ஒரு பகுதியைக் கடந்திருக்கிறார் (60 ரூ 60 ழூ 120 வயது) என்பதையறிந்து மகிழ்வடைகிறேன்.
இருக்கும் காலத்துள், ஏதேனும் சேவை நிலைபெறத்தக்க வகையில் இருக்க அவர் விழைந்த பயனே ‘அணு ஆயுதம் ஒழிப்பு, அணு ஆயுதம் ஒழிய வேண்டும்’ என்ற மேலான எண்ணம்.

இன்றைய உலக நிகழ்விலோ ‘ஆயுதம் ஓழிக்கப்பட வேண்டும்’ என்று வலியத் துடிக்கும் ஒரு பெரும் வல்லரசு உலகில் தனக்கு ஈடான வகையில் எந்த வல்லரசும் இல்லை என்று மார்தட்டிக் கொண்டே. தன்னிடமுள்ள ஆயுதங்கள் இல்லாத நாட்டினர் மீது ஏவி அழித்து விடுகிறது. இல்லை …. இல்லை செலவினம் செய்து வருகிறது. மீண்டும் புதியவையாகக் கண்டுபிடிக்க தயாரிக்க, விற்க. உலகம் விழித்தெழ வேண்டும்.

இத்தகைய தருணத்தில், இன்றைய சிறார்கட்கு – குறிப்பாக கல்வியை வளர்த்துக்கொள்ள முனைப்புடன் பயிலும், பயிற்றுவிக்கும் பள்ளிகட்கும் சென்று நமது அண்ணல் காந்தியடிகளின் சீரான செயல்பாடு குறித்தும் மகாகவி பாரதியாரின் தமிழார்வம் மற்றும் சுதந்திர வேட்கை குறித்தும் சற்றே விளக்கம் தாமறிந்த வகையில் அளித்து வரும் பணி நாட்டிற்கு உகந்ததான ஒன்றே என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

அறுபது பள்ளிகட்கும் மேலாகச் சென்று, மேற்குறிப்பிட்ட பணிகளை முதிர்ந்த 83 வயதிலும் ஆற்றுவது சிறப்பானது.

தந்தை பெரியார் அடிச்சுவட்டில் காலடி வைத்து, பொது அறிவையும் வளர்த்துக் கொண்டு பேசுவதற்கே சிரமம் இருந்த நிலையை மாற்றி தொடர் முயற்சியால் பேசிக் கொண்டே போகலாம் அதற்கு தடையில்லை, பேச்சு என்று தொடங்கிவிட்டால் என்ற நிலைக்கு உயர்ந்த ஒருவரின் விவரக் கருத்துகள் - உரைகள் அறிந்த ஒன்றேயாயினும், அவர் நு}லில் அறிவித்த விதம் சிறுவரில் இருந்து பெரியவர் வரை வாசிக்கத்தக்கதாக அமைந்துள்ளது. அது ஒன்றே போதும், அவரது சிறு உரை நு}ல் சிறப்புக்கு எனலாம்.
என்றென்றுமன்புள்ள
எஸ்.ஜp. இசட்கான்
ஆசிரியர்,
‘சிந்தனையின் அபிநயம்’





V.R. SUBRAMANIAM, B.E.,M.I.E.,
           Senior Charted Engineer       
நெல்லுக்குப்பம்மன் துணை !
அணுவீஸ்வரர் துணை !
திருப்பூர்

                                                                                              21-8-2004


                                                                    சிறப்புரை

“உலக அமைதி கருதி உலக அமைதியையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு தனிப் பெரும் ஒற்றையாள் படையாக (One Man Army) பல்லாண்டுகளாகப் பாடுபட்டுவரும் பெரியவர் உயர்திரு. எம்.கே. சவுண்டப்பன் அவர்கள் கோவை மாவட்டத்தில், பல்லடம் வட்டத்தில், சின்ன வதம்பச்சேரி என்னும் சிற்று}ரில் அவதரித்து, ஆன்மீக நெறியில் சிறு வயது முதல் ஈடுபாடு கொண்டு உலக நன்மைக்காகப் பலவாறு சிந்தித்து செயல்பட்டு வருங்கால உலகில் பலவாறாக மக்கள் பிரிந்து தங்களுக்குள் சண்டை சச்சரவு என்று சிறு அளவிலும், உலகப் போர் என்ற பெரிய அளவிலும், அளவில்லாத அழிவிற்கும், துன்பங்களுக்கும் ஆளாவதைப் பார்த்து மனத்தால் பொறுக்க முடியாத துன்பமுற்று இவற்றுக்கான மூல காரணங்களை ஆய்ந்து இத்துன்பங்களையெல்லாம் நீக்க வேண்டுமானால் உலக மக்கள் அனைவரும் அன்புருக்கொண்டு ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்றும், அவ்வாறு ஒற்றுமையை உலக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்றால் அனைத்துலக மக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு காரண காரியத்தினால்தான் இயலும் என்று ஆய்ந்து அறிந்து அவர்கூறிய காரண காரியம் இக்கலியுகத்தில் நிகழ் காலத்தில் அணுகுண்டு என்ற அரக்கனால் அகில உலக மக்களுக்கும் அழிவு ஏற்படும் என்கின்ற நிலையில் அனைத்து மக்களும் அணுகுண்டு அரக்கனைக் கண்டு அஞ்சி உள்ள இவ்வேளையில், அணுகுண்டு அரக்கனை அழிப்பதை அடிப்படையாகக் கொண்டு, அவ்வாறு அணுகுண்டு அரக்கனை அழிப்பது மனிதரால் ஆகாது என்றாய்ந்து அது தெய்வத்தால்தான் முடியுமென்று ஆய்ந்தறிந்து அணுகுண்டு அரக்கனை அழிப்பதற்கு ‘அணுவீஸ்பரர்’ என்ற அவதார புருசரை தன் உள்ளுணர்வால் ஆய்ந்து, அறிந்து அவ்வணுவீஸ்வரரால்தான் உலக மக்களை உய்விக்க முடியும் என்றுணர்ந்து, இப்பெரிய உலகில் நமது இந்திய தேசத்தின் தென்பகுதியில், கோவை மாவட்டத்தில், பல்லடம் வட்டத்தில் அணு போல சிறிதாக உள்ள சின்ன வதம்பச்சேரி என்கின்ற சிற்றுரில், அணுவீஸ்வரன் என்கின்ற தெய்வத்தை உருவகித்து _ ராமலிங்க சவுடேஸ்வரி என்கின்ற திருக்கோவிலில் இருத்தி அவ்வணுவீஸ்வரரின் புகழ்பாட, பரவ, உலகெல்லாம் மக்கள் இன்புற்று ஒற்றுமையுடன் வாழ ஒரு ஆரம்பமாக “ஓம் _ முருகாராம்” என்கின்ற பஜனை மன்றமொன்றைக் கண்டு அதன் மூலம் பக்திப் பாடல்கள் பாடி மக்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்துடன் அயராது பாடுபட்டு வரும் பேரருளாளர் எம்.கே. சவுண்டப்பன் என்ற திருநாமம் தரித்து உயர் நோக்கம் கொண்டு இவ்வரிய நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்று ஆராய்ந்து இந்நோக்கத்திற்கான விதைகளை பிஞ்சு உள்ளங்களில் பதித்துவிட்டால் அதை காலப்போக்கில் துளிர்த்து வளர்ந்து பெரிய மரங்களாகி, பல்கிப் பெருகி உலகெல்லாம் பரவும் என்றுணர்ந்து, பள்ளிகள்தொறும் சென்று இவ்வுயரிய தொண்டின் பொருட்டு அரிய விதைகளை இளம் உள்ளங்களில் அயராது பதித்து வருகின்றார்.

இச்சீரிய முயற்சி அணு போன்ற சின்னவதம்பச்சேரி என்னும், சிறிய இடத்திலிருந்து ஆரம்பித்தாலும் அது அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஈரான், ஈராக், அரேபியா இன்னும் பல நாடுகளைக் கொண்ட உலகம் முழுதும் உள்ள மக்களைச் சென்றடையும் என அசைக்க முடியாத உறுதியுடன் அரும்பணியாற்றி வரும் உயர்திரு. எம்.கே சவுண்டப்பன் என்கின்ற ஆன்ேறாருடைய பெரிய விருப்பம், ‘அணுவீஸ்வரன் அருளால்’ விரைவில் நிறைவேற வேண்டும் என்று என் குல தெய்வம் நெல்லுக்குப்பம்மனை வேண்டி முடிக்கின்றேன். வணக்கம் *

இப்படிக்கு,
உலக மக்கள் நலம் நாடும் அன்பன்,
என்ஜpனியர் வி.ஆர். சுப்பிரமணியம், பி.இ.எம்.ஐ.இ.
11கு, சபாபதிபுரம் முதல் வீதி,
திருப்பூர் - 1.
போன் ் 0421 – 2240730

No comments:

Post a Comment